2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட மாபெல்லே பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தையின்  சடலம் மஹாபெலன பகுதியில் இன்று சனிக்கிழமை(19) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபெல்லே பகுதியிலுள்ள கற்பாறைக்கு குழந்தையும் மனைவியையும் அழைத்து சென்ற நபர் அவ்விருவரையும் அங்கிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

அவரது மனைவி கரைக்கு நீந்திவந்து உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார். எனினும்,  இரண்டரை வயதுடைய குழந்தை காணமற்போயிருந்தது.

இந்நிலையிலேயே குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X