2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரை பிரதமர் சந்தித்தார்

R.Tharaniya   / 2025 ஜூன் 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) அன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை  அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் , பொருளாதாரம் மற்றும் சமூகத்தை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தி வருவதாக பிரதமர் எடுத்துக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .