2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தினமும் தேசபந்து மீதான விசாரணை

Freelancer   / 2025 ஜூன் 16 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசபந்து தென்னகோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, இன்று (16) முதல் விசாரணை முடியும் வரை தினசரி கூடுவதற்கு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேசபந்து தென்னகோன் இன்றும் குழுவின் முன் ஆஜரானார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான இந்தக் குழு ஏற்கனவே பல தடவைகள் கூடி, தேசபந்து தென்னகோன் உட்பட பலரிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.

குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .