Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 07 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு – கோட்டை – டெலிகொம் நிறுவனத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றில், பொதியொன்றை வைத்துச் சென்று மக்களை அச்சுறுத்த முயற்சி செய்த சம்பவமொன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்ஸில் பொதியொன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் அது குறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், குறித்த பொதியானது பொதுமக்களை பீதியடை செய்வதற்காக யாரேனும் வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமெரா ஊடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதனை யார் செய்தார் என்பதனை கண்டறியலாமென்றும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பஸ்ஸை வீதியில் நிறுத்தி சென்றமை குறித்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago