2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தனியார்துறை ஊழியர்களின் சம்பள கால எல்லை நீடிப்பு

Editorial   / 2020 ஜூலை 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன, தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அவர்களது சம்பளத்தின் அரைப்பங்கு அல்லது ஆகக் கூடிய சம்பளமான 14,500 ரூபாயை செப்டெம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (16) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை செப்டெம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .