Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டுக் குற்றச்சாட்டிற்காக ஒரு வருட சிறைத்தண்டனை பெற்று வந்த கைதியும், விளக்கமறியல் கைதி ஒருவருமே நேற்று காலை தப்பியோடினர்.
உடனடியாக செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார், 30 நிமிடங்களுக்குள் இருவரையும் கைது செய்து மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, தப்பியோடிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 6 மாத சாதரண சிறைத்தண்டனையும், தலா 1500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago