2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்லில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள், விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னதாக, மாவட்டத் தேர்தல்கள் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்குமாறு,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் அதற்கான கால அவகாசத்தை, தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

எனவே, தபால்மூலம் வாக்களிக்கவுள்ளோர் விண்ணப்பங்களை, மே 4 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X