Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அம்மா அப்பா தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் சொல்ல ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால் அந்த வார்த்தைகள் இன்று மாறி மம்மி, டேடி என தமிழர்கள் வீட்டில் பாவிக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே தமிழ் கலாச்சாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் கலாச்சார சீர்குலைவு என்பது மொழியில் ஆரம்பித்து ஒவ்வொரு வீடுகளாக ஆட்கொள்ள தொடங்கியது.
ஆங்கிலேயரின் கலாச்சாரச்சை நாகரீகமாக கருத தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு தமிழ் கலாச்சார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெற தொடங்கின. அவ்வாறு இருக்கும் நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு தலைவர் பா.கு சண்முகம் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்தல், சான்றோர்களை கௌரவித்தல், போன்ற நல்ல வேலைத்திட்டங்களை மலேசியாவில் முன்னுதாரணமாக செய்து வருகிறார். இந்நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும்,தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களுடைய மிக முக்கியமான பொறுப்பு ” என தெரிவித்தார்.
47 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago