2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’தமிழர் பிரச்சினையை தீர்த்தால் நெருக்கடி தீரும்’

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாத வரை பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதியை செலவிட வேண்டியேற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

போர் முடிவடைந்த பின்னரும் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், தற்போது சிங்கள மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை, தமிழ் மக்கள் நடத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7