2025 ஜூன் 25, புதன்கிழமை

’தமிழர்களை கோர்த்துவிட வேண்டாம்’

Kamal   / 2019 மே 28 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்கால பிரச்சினைகளை தமிழர்களின் பிரச்சினைகளுடன் கோர்த்துவிட அரசியல்வாதிகள் முயற்சி செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் குற்றஞ்சாட்டுகிறார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளமை  மேற்படி விடயத்தை வெளிப்படுத்துவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தமிழர் பிரச்சினையுடன் ஒப்பிட முடியாதெனவும், மதத்தின் பெயரை பயன்படுத்தி அப்பாவிகளை கொன்றுகுவித்ததை மாத்திரமே செய்தனர் என்றும் தெரிவித்தார். 

அதேபோல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தமிழர்களையும் இந்த பிரச்சினைக்குள் கோர்த்து விடும் நோக்கில்தான் முஸ்லிம்களை சந்தேகமாக பார்க்க வேண்டாம் என கூறுகிறாரா? என்றும் வினவினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .