Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 30 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக, அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு மீண்டும் அறிவிக்கவுள்ளதாக, இக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக, தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் யாரென்பது தனக்குத் தெரியுமென, தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமைத் தொடர்பில் விசாரணை செய்யவே, தயாசிறி அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த குமாரிசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகவில்லை எனவே, மீண்டும் அறிவிக்கபடும் போது, அவர் முன்னிலையாகவிட்டால், அவருக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .