2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை

Freelancer   / 2025 ஜூன் 11 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால், கண்டி - மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

கண்டி - பேராதனை இடையிலான மலையகப் பாதையின் ரயில் சேவைகளை இன்று (11) காலை முதல் தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்ட காரணத்தினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழு அப்பகுதியை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X