2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா    நேற்று (08) இரவு வீதி வலம் வந்தது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரஹெரவைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்தார்.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .