2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றியவர் கைது

Editorial   / 2025 நவம்பர் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்   ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கிராண் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவர், திங்கட்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வாழைச்சேனை பிரதேச சபையால் அகற்றப்பட்டு சபை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏழு பெயர்ப்பலகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பகுதிக்குப் பொறுப்பான உதவிக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜருல்   தெரிவித்தார்.

தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றிய சம்பவத்தில் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர், துணைச் செயலாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக   ஜருல் மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் ஊழியர்கள் குழுவொன்று கடந்த 22 ஆம் திகதி அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் குறித்து பௌத்த மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X