2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

Freelancer   / 2024 மே 07 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல, ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று மாலை திடீர் தீ விபத்து   ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தொழிற்சாலையின் உடைமைகள் சேதமடைந்துள்ளன.

எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X