2025 ஜூன் 18, புதன்கிழமை

“தவறினால் சட்ட நடவடிக்கை”

S.Renuka   / 2025 மே 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார நிதி விவரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27) நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில்  தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போட்டியிட்ட 79,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (27) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைகிறது.

மேலும், 2023ஆம் ஆண்டு தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண்.3 இன் விதிகளின்படி, அவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி ஆணையத்திடம் இல்லை.

டெய்லி மிரரிடம் பேசிய தேர்தல் ஆணைக்குழு  தவிசாளர் ஆர்.எம். ஏ.எல்.ரத்நாயக்க,

கடந்த வாரத்திற்குள் மாவட்டத்தில் உள்ள அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் 10,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறினார்.

காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அனைத்து வேட்பாளர்கள், அவர்களது கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கமான https://cf.elections.gov.lk/ இல் எளிதாகப் பதிவு செய்து தேர்தல் செலவு விவரங்களைப் பதிவேற்றலாம் என்று அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .