2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’தவளைகள் எமது பக்கத்திலும் உள்ளன’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான் எனத் தெரிவிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க, கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன என்றா​​ர். 

பத்தனையில் (17) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்பதால், அந்த உரிமையை எவரும் களவாடமுடியாது என்றும், சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்களித்தவர்களின் யுகம் இன்று இல்லையெனவும் தெரிவித்தார். 

கள்வர்கள் , கொள்ளையர்களும் நாடாளுமன்றம் தெரிவாவதால் நல்லவர்களையும் மக்கள் திட்​டித்தீர்ப்பதாகவும், 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் என விமர்சிக்கும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவித்த அவர், சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது என்பதே உண்மை நிலைவரம் என்றார்.  

இருப்பினும் கட்சி தாவுவோருக்கு மக்களே புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டுமெனவும்,  இதனால்தான் மஹிந்தவை விட்டுச்சென்றவர்களுக்கு வாக்களிக்ககூடாது என பிரசன்ன ரணதுங்க கூறி வருகிறாரெனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .