2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் ரணில் கண்டனம்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அமைதியுடனும், பொறுமையுடனும் செயற்படுமாறும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செய்திகளை பொதுமக்கள் தவிர்க்குமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .