2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாயைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த மகள்

Simrith   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாயைக் கழுத்து நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர் பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X