2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘திடீர் மின்துண்டிப்பு இன்று மாலை வழமைக்குத் திரும்பும்’

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கம்பமொன்றில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், நேற்று மாலை தடைப்பட்ட மின் விநியோகம் சில பகுதிகளில் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளதென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்தடையும் இன்று மாலை வழமைக்குத் திரும்புமென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த திடீர் மின்துண்டிப்பால், 42,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஹோமாகம, கொட்டா​வ, ஹொரனை, அவிஸ்ஸாவெல, பாதுக்க, ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்ககளுக்கே நேற்று மாலை மின் தடை ஏற்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .