2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘திட்டமிட்டப்படியே பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும்’

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (09) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பானது, திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுமென, ரயில் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக, ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர், இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள்களுக்கு ரயில் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுமென்றும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரால் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் மட்டும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .