2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பணிகள் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பின்னர், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதையடுத்தே, பிரதேச சபை எல்லைக்குள் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் வரை, தன்னால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அக்கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .