2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தீப்பற்றிய கப்பலில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் போது, காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சங்கமாங்கந்த கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் நேற்று (03) தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பனாமா அரசுக்கு சொந்தமான கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .