2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜூன் 30 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலதெனிய பிரதேசத்தில்  பிரதேசத்திலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையொன்றில் இன்று பகல் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

டெல்மா லங்கா தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையி​லேயே தீப்பரவல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத் தீப்பரவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கட்டுகஸ்தோட்டை பொலிஸார், இதனால் எவருக்கும் எவ்வித காயங்களோ, உயிராபத்துகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .