2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தீவிரவாதக் குழுவுக்கு சூதாட்டம் ஊடாக நிதியுதவி கிடைத்திருக்குமென சந்தேகம்

Editorial   / 2019 மே 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய, தீவிரவாதக் குழுவுக்கு சூதாட்டம் ஊடாக நிதி கிடைத்திருக்குமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்தும் இலங்கைக்கு வருகைத் தரும் சூதாட்டக்காரர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பிலுள்ள சூதாட்ட மத்திய நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரின் அலைபேசியில் சந்தேகத்துக்கிடமான சில புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபடும் சில இலங்கையர்கள் தொடர்பிலும் சூதாட்டத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் குறித்தும்  கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .