2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இலங்கையில் கொள்கையில்லை’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் சுற்றுலாத்துறை உள்ளிட்டப் பிரிவுகளில், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த குழு விடுத்துள்ள அறிக்கையில், சுற்றுலா, பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு கடந்த மே மாதம் 13ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில், பல நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் இதை அறிவித்துள்ளது.

போட்ஸ்வானா, கேப் வெர்டே, கோட் டி ஐவரி, மால்டா, சிங்கப்பூர், இலங்கை, டோங்கா ஆகிய நாடுகள், இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .