2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - நூர்நகர் பகுதியில் துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று (25) கைதுசெய்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - மணல்குன்று பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.

இதன்போது,  சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 6 துப்பாக்கி ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .