2025 ஜூன் 19, வியாழக்கிழமை

துஷ்பிரயோகம் உள்ளிட்ட 18 குற்றங்களில் தேடப்பட்டவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், எப்பாவல, இஹல ஹல்மில்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 18 குற்றங்களில் தேடப்பட்ட சந்தேக நபர் மோட்டார் வாகனத்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, மோட்டார் வாகனத்தில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் மெகசின் மற்றும் 3 ரவைகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்  கோனஹேன பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் தடுப்பு காவல் உத்தரவில் எப்பாவல பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .