2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தென்னாபிரிக்க ஜனாதிபதியின் குறுகிய விஜயம்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா, இன்று (27) காலை, இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜப்பானில்  நடைபெறவுள்ள, G20 அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் நோக்கி பயணித்த அவர், இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (27) காலை  கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.

தென்னாபிரிக்க விமான சேவைக்குச் சொந்தமான  விசேட விமானமொன்றில்,  காலை 10.20 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன், 20 பேர் அடங்கிய குழுவினரும் வருகைதந்திருந்தனர்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கும் இடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறுகிய கலந்துரையாடல்  ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, விமானத்துக்கு தேவையான எரி​பொருளை பெற்றுகொண்டு, பி.ப.12 மணியளவில், தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்,  ஜப்பான் நோக்கி பயணித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .