2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தென்னையின் அடிப்பாகம் முட்டியதில் குழந்தை மரணம்

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவீந்திர விராஜ் அபேசிறி

பெக்கோ இயந்திரத்தின் மூலமாக சுழற்றி, அப்புறப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னை மரத்தின் அடிபாகம் உருண்டோடி, அடுத்த வீட்டில் விளையாடிகொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தையின் உயிரை பறித்த பரிதாபகரமான சம்பவமொன்று மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீடொன்றை கட்டுவதற்காக, பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன், அத்திபாரம் வெட்டி, நிலத்தை மட்டப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அப்போது தென்னை மரத்தின் அடிபாகமொன்று சுழற்றி அப்புறப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அடிபாகம் உருண்டோடி பக்கத்து வீட்டின் வாசலில் விளையாடிகொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தையின் மீது முட்டியதில் அக்குழந்தை அவ்விடத்திலேயே உயிரழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .