2025 ஜூன் 25, புதன்கிழமை

தெரிவுக்குழுவின் இரண்டாம் நாள் விசாரணைகள் நாளை

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள், இரண்டாவது நாளாகவும், நாளைய தினம் மாலை 3 மணிக்கு,  இடம்பெறவுள்ளன.

நாளை மாலை 3 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக, 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய குற்றவிசார​ணை திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .