Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 20 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பங்கரவாதத் தாக்குதலின் போது, நாட்டின் பாதுகாப்பு நிலைமையிலிருந்த குறைபாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான பரிந்துரைகள் உள்ளிட்டவை தொடர்பில் நியமிக்குமாறு கோரப்பட்டுள்ள தெரிவுக்குழு தொடர்பிலான யோசனை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆளும், எதிர்க்கட்சிகளின் பேதமின்றி, 40 பேரின் கையொப்பங்களுடன் இந்த யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. அதுவே, ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் தேடியறிந்து, அதுதொடர்பிலான புலனாய்வுத்துறை அறிக்கைகள், சட்டரீதியான நடவடிக்கைள், அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள பரிந்துரைகள் உள்ளிட்டவை மற்றும் தகவல்கள் கிடைத்தும் அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காமை உள்ளிட்டவை தொடர்பிலேயே ஆராய்ந்து அறிக்கையிடுவதற்குத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டது.
தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. சாட்சியாளர்களைத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் அழைப்பதற்காக அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். நாட்டில் எந்தவொரு பாகத்திலும் கூட்டங்களை நடத்துவதற்கும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும் தெரிவுக்குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago