2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தெற்கிலிருந்து வடக்குக்கு வெடிப்பொருள்களுடன் 20 வாகனங்கள்

Editorial   / 2019 மே 02 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப் ரக வாகனங்கள், ஓட்டோ 1, டீமோ பட்டா லொறியொன்று, 2 கார்கள் இவ்வாறு வடக்குக்குள் நுழைந்துள்ளதாகவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றுத் தொடக்கம் குறித்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .