2025 ஜூன் 18, புதன்கிழமை

தெஹிவளை துப்பாக்கிதாரி கைது

Simrith   / 2025 மே 27 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 19 ஆம் திகதி தெஹிவளை, நெடிமலவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடிமலவில் உள்ள ஒரு கடையில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்றதற்காக சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று 10.16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் 10.35 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

38 மற்றும் 43 வயதுடைய சந்தேக நபர்கள் தெஹிவளை மற்றும் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள். இது குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .