Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 08 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாய்த் உறுப்பினர் ஒருவரை விடுவிக்கக்கோரி, ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய அதிபருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்பு- ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள அப்துல் மஜிட் மொஹமட் நியாஸ் என்ற நபரை விடுவிக்கக் கோரியே இலஞ்சம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபரின் நெருங்கிய நண்பரெனச் சந்தேகிக்கப்படும் ஹொரவப்பொத்தான பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர், 5 இலட்ச ரூபாயை இலஞ்சமாக வழங்க முன்வந்த நிலையில், இரண்டரை இலட்ச ரூபாயுடன் இன்று காலை பொலிஸ் நிலையத்துக்கு வந்த போது, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago