2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய தௌஹீத் ஜமாய்த் உறுப்பினரை விடுக்க கோரி இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது

Editorial   / 2019 மே 08 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாய்த் உறுப்பினர் ஒருவரை விடுவிக்கக்கோரி, ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய அதிபருக்கு இலஞ்சம் ​கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்பு- ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள அப்துல் மஜிட் மொஹமட் நியாஸ் என்ற நபரை விடுவிக்கக் கோரியே இலஞ்சம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரின் நெருங்கிய நண்பரெனச் சந்தேகிக்கப்படும் ஹொரவப்பொத்தான பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர், 5 இலட்ச ரூபாயை இலஞ்சமாக வழங்க முன்வந்த நிலையில், இரண்டரை இலட்ச ரூபாயுடன் இன்று காலை பொலிஸ் நிலையத்துக்கு வந்த போது, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .