Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாடசாலைகளுக்கு, இடைநிலை தரங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறையினை மேலும் விஸ்தரிக்குமாறு, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, இந்த வருடம் (2019)முதல் இடைநிலை வகுப்புகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது, பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு பெற்றோருக்கு வழங்கப்படவுள்ளது.
தேசியப் பாடசாலைகளுக்கு, தரம் 1-5 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு மாணவர்களை இணைத்துகொள்ளும் போது, கல்வி அமைச்சின் செயலாளரின் 2008/37 என்ற சுற்றுநிரூபத்துக்கமைய மேற்கொள்ள வேண்டுமென ,கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வகுப்பொன்றில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு அமைய, வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துகொள்ளப்படுவர்.
வெ ற்றிடம் நிலவும் பாடசாலைகள், விண்ணப்பிக்கும் முறை என்பன தொடர்பான சகல தகவல்களையும், www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
54 minute ago