Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு, தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று நாட்டில் நிலையான அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை ஆனந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான இரண்டு மாடி தங்குமிட விடுதியை, மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (05) இடம்பெற்றபோது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த நான்கரை வருட காலப் பகுதியில் எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் அனைத்து மக்களும் தெளிவுடன் வாழக்கூடிய அமைதியான நிலைமை ஒன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் எதிர்பாராத நிலைமை ஒன்று நாட்டில் உருவானபோதும் தற்போது மீண்டும் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமைகளுக்கு மத்தியில், இன்று நாட்டில் உள்ள அனைவர் மீதுமுள்ள பொறுப்பு, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாகவும் பலமாகவும் முன்னெடுப்பதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .