Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர்களுள் ஒருவரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஸ் பத்திரன, தேயிலையை உற்பத்தியை மேம்படுத்த, 30 மில்லியன் தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்தித் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார் என்றார்.
பிரதானமாக இலங்கையின் தேயிலை உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உற்பத்தி பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி சகல தேயிலைத் தோட்டங்களினதும் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். விசேடமாக பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள தோட்டங்களின் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
அதற்கான யோசனையை முன்வைக்குமாறு அரச மற்றும் தனியார் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதால், எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் இதன்கீழ் வருடாந்தம் இலங்கையில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் இதனை அதிகரிப்பதற்காக 500 உற்பத்தி தவறணைகள் ஊடாக இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் இலங்கை பூராகவும் 30 மில்லியன் தேயிலைக் கன்றுகளை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கவும், திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 hours ago