2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தேவையற்ற பொருள்களுக்கே இறக்குமதி மட்டுப்பாடுகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இரண்டரை வருடங்களுக்கு போதுமான வாகனங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நாட்டுக்கு தேவையற்ற பொருள்கள் இறக்குமதி மீ​தே, மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (24) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

வாகன இறக்குமதிதுறையானது அந்நிய செலாவணியை நாட்டுக்கு வெளியே கொண்டுச் செல்லும் துறையாகும் என்றார்.இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளவை தேவையற்றவை. உதாரணமாக 2019ஆம் ஆண்டு வரை 1,000- ,200 டொலர் மில்லியன்  செலவில் இலங்கைக்கு கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு 2015- 2019 வரை  கொண்டு வரப்பட்ட கார்கள் இரண்டரை வருடத்துக்கு போதுமானதாக உள்ளதென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .