Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 19 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு அரசாங்கம் மறுத்ததோ அதேபோல் தனது சொந்தமக்களான சிங்கள மக்களின் உரிமைகளை அரசாங்கம் மறுத்தமைமே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படக் காரணமென தெரிவிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தோல்வியடைந்த ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.
ஆட்சியில் உள்ள அரசாங்கம் எங்களுக்கானதில்லை என என்று நாட்டு மக்கள் எப்போது சிந்திக்க ஆரம்பிக்கிறார்களோ அல்லது அரசாங்கத்தைத் தங்களது எதிரிகளாக நாட்டு மக்கள் சிந்தித்தாலோ நாட்டுக்கு மக்களுக்கு வேறுவழிகள் இல்லை. அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகத்தான் திரும்புவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு இந்த அரசாங்கம் மறுத்தது, அவ்வாறே சிங்கள மக்களின் உரிமைகளையும் இந்த அரசாங்கம் மறுத்து வருகிறது. இதனாலேயே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகவில்லை என்பதாலேயே நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
7 hours ago