Mayu / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் நிதியை, சைபர் மோசடி மூலம் திசைதிருப்பியமை தொடர்பான விசாரணைக்காக நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்திருந்தது.
இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பின்வருவோர் அடங்குவர்:
குறித்த நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு இந்த அதிகாரிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் அங்கு முன்னிலையாகத் தவறியிருந்த நிலையிலேயே தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
36 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
36 minute ago
45 minute ago
1 hours ago