2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு

Mayu   / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 அஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் நிதியை, சைபர் மோசடி மூலம் திசைதிருப்பியமை தொடர்பான விசாரணைக்காக நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்திருந்தது.

இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பின்வருவோர் அடங்குவர்:

  • வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர்.
  • பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம்.

 குறித்த நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு இந்த அதிகாரிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் அங்கு முன்னிலையாகத் தவறியிருந்த நிலையிலேயே தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .