2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நன்கொடையாளர்களுக்கு வங்கிக்கணக்கு

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள், சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக, விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இந்த வங்கிக் கணக்கு, கொழும்பு கொமர்ஷல் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கபட்டுள்ளது என்றும் இந்த வங்கிக் கணக்கு, கொழும்பு போராயரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி கணக்குக்கு, “ 2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு, தேவாலயங்களை புனரமைப்பதற்கான விஷேட நிதி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் கணக்கிலக்கம் 1190038741 என்ற கணக்கிலக்கிலக்கத்துக்கு, கொடையாளிகள், நன்கொடைகளை வழங்கமுடியும் என்று, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .