2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’நல்லாட்சியில் மக்களுக்கு பயனில்லை’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ரப் ஏ சமத்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தான் காணும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி வேண்டுமென நினைப்பவர் என்று தெரிவிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நல்லாட்சியால் நாட்டு மக்களுக்கு எந்தவொரு பயனும் கி​ட்டவில்லை என்றும் சாடினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இருந்த காலத்திலேயே, கொழும்பு நகரிலுள்ள சேரிகளை அகற்றிவிடடு தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் எனவும், அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் தொடர்மாடி வீட்டுத்திட்டம் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி சரியான முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அத்தோடு அவர் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும் போது காணும் குறைபாடுகளை கவனத்தில் கொண்டு அவற்றை உடனடியாக திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர் என்றும் தெரிவித்தார். 

தெஹிவலை, கல்கிஸை மாநகர சபை முன்னாள் மேயர் தனசிறி அம​ரசிங்கவின் ஏற்பாட்டில் நேற்று (17) தெஹிவலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

நாட்டின் சட்டத்திட்டங்க​ளை திருத்துவதற்கே 2/3 பெரும்பான்மையை கோருவதாகவும் அந்த அதிகாரம் கிடைத்தால் நாட்டில் பல்வேறு திருத்தங்களை செய்ய முடியுமென்றும் தெரிவித்தார்.

அத்தோடு தற்போது ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிரிந்துவிட்டதென தெரிவித்த அவர், ரணிலும் சஜித்தும் சிறிகொத்தவின் அதிகாரத்தை கைபற்றிக்கொள்ளவே போட்டியிடுகிறார்கள் என்றார். 

அதனால் மக்களின் வாக்குகள் வீணடிக்கப்பட கூடாதென கோரிய அவர், நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றார்.

மைத்திரியும் ரணிலும் இரு திசையில் சென்று கொண்டிருந்தால் நாட்டின் அபிவிருத்தி எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும்  தெரிவித்தார். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .