2025 ஜூன் 18, புதன்கிழமை

நள்ளிரவுடன் நிறைவடையும் காலக்கெடு

Freelancer   / 2025 மே 26 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தினம் நாளை (27) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காலம் எவ்வகையிலும் நீடிக்கப்படாது என்றும் சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், செலவு அறிக்கைகளை ஏற்க நாளை நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாளை நள்ளிரவுக்குப் பின்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .