2025 ஜூன் 16, திங்கட்கிழமை

நாடளாவிய ரீதியில் 1,500 வெற்றிடங்கள்

Editorial   / 2020 ஜூலை 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 1,500 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நாடளாவிய ரீதியில் நிலவுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடாத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர்  ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 14,022 கிராம உத்தியோக பிரிவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .