2025 ஜூன் 12, வியாழக்கிழமை

நாடளாவிய ரீதியில் இன்று விசேட சுற்றிவளைப்பு

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாக, பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பெற்று அதனை பதுக்கி வைப்பதால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெற்றோல் மற்றும் டீசல் இன்றி வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு பதுக்கி வைக்கப்படும் எரிபொருள் தொகை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த செயற்பாட்டை தடுக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13