2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு’

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசமைப்பின்  33 (2) உறுப்புரைக்கமைய,  நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் நாடாளுமன்ற கூட்டதெமாடரை ஆரம்பிக்கவும், நிறைவு செய்யவும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்குமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தான் தகுந்த நடவடிக்கையென தான் கருதுவதாகவும், இல்லையென்றால் சிக்கல் நிலையொன்று ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .