2025 ஜூலை 12, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐக்கிய அமெரிக்கா மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் ஏற்படும் தாமதமானது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென, அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஹேதர் நயரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டுக்குள் நல்லாட்சி மற்றும் நிலையானத் தன்மையை ஏற்படுத்த விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .