Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டம், நாளை (08) ஆரம்பமாகி, வெள்ளிக்கிழமை (11) வரையிலும் நடைபெறும். அன்றையதினம், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மீதான அனுதாப பிரேரணை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்.
இதன்போது, பாதுகாப்பு, நிதி, நகர அபிவிருத்தி, நீதி, வெளிநாட்டலுவல்கள் உள்ளிட்ட அமைச்சுசார் ஆலோசனை குழுக்கள் 28 நியமிக்கப்படும். விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர், குழுவின் தவிசாளராக இருப்பார். இராஜாங்க, பிரதியமைச்சர் உட்பட ஐந்து உறுப்பினர்கள், குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
அத்துடன், அரசாங்கத்தின் நிதி பற்றிய குழு, உயர் பதவிகள் பற்றிய குழு ஆகியவற்றுக்கு 18 உறுப்பினர்கள், நாளையதினம் (08) நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் யார்? என்பது இன்னுமே மர்மமாக இருக்கிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நான்கு மாதங்களுக்காக, இடைக்கால கணக்கறிக்கையை அரசாங்கம் ஓகஸ்ட் 27ஆம் திகதியன்று சமர்ப்பித்திருந்தது. அதில், பாதுகாப்பு அமைச்சுக்கு 174 ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு, இவ்வளவு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆளும் தரப்பினர் பதில் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago
6 hours ago