Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
J.A. George / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உரையாற்றினார்.
இதன்போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டு தன்னை சிறைவைத்துள்ளதாக அவர் கூறினார்.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது உரையில், “16 வயதில் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தேன். பின்னர் அதனுடைய செயற்பாடுகள் பிடிக்காத நிலையில் வெளியேறினேன்.
முடிந்தளவு 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை காப்பாற்றினோம். தற்போது மக்களின் வாக்குகளால் பலமான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது..
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் மாகாணபை உள்ளிட்ட விடயங்களை வலுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவினை பெற்றுக்கொடுப்பேன்.
எனினும், சிறையில் இருப்பதால் என்னால் முழுமையாக மக்கள் சேவையாற்றுவதில் சிரமங்கள் உள்ளன. முழுமையாக நான் மக்கள் சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .